News July 5, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் கூட்டம்

image

மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வரும் 10ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படவுள்ளது. முகாமில் தங்களது குறைகளை இரட்டை பிரதிகளில் மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு காணலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Similar News

News July 10, 2025

மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

image

மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஆரப்பாளையம் பஸ் நிலைத்திலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லும் நகர, புறநகர் பஸ்கள் தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேசன் வழியாக செல்லவேண்டும்.ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லும் நகர் பஸ்கள் குருவி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

News July 10, 2025

மதுரையில் ரூ.37 ஆயிரத்தில் வேலை வாய்ப்பு

image

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் SHRI திட்டத்தின் கீழ் நடைபெறும் “மதுரையின் சித்திரை விழா ஆடைகள், நடனங்கள் மற்றும் சடங்குகளை பாதுகாப்பதற்கான ஆவணப்படுத்தல் மற்றும் வகைப்பாடு” என்ற ஆராய்ச்சி திட்டத்திற்காக, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (JRF) மற்றும் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட்/புலத் தொழிலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News July 10, 2025

மதுரையில் ஒரே நாளில் 2149 பேர் கைது

image

மதுரையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்த முன் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., உட்பட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 846 பெண்கள் உட்பட 2149 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!