News July 5, 2024
பிஆர்எஸ்ஸின் 6 எம்எல்சிக்கள் காங்கிரஸுக்கு தாவல்

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.சி.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, மல்லேசம் ஆகிய 6 எம்.எல்.சி.க்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளனர். கடந்த மாதம் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இருவர் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 23, 2025
ரசிகர்களின் காத்திருப்பை அதிகரித்த சூர்யா

நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், ‘கருப்பு’ படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், இந்த ஆண்டு வர வாய்ப்பில்லை. அடுத்தாண்டு பொங்கலுக்கு ஏற்கெனவே ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் சூர்யாவின் கருப்பு படம் 2026 ஏப்ரலில்தான் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News September 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 467
▶குறள்: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
▶பொருள்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
News September 23, 2025
ஓய்வின்றி உழைக்கும் PM மோடி: அமித் ஷா

கடந்த 24 ஆண்டுகளில் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இடைவிடாத உழைப்பு பிரதமரின் முடிவுகளையும், பணியின் வேகத்தையும் பாதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மோடியின் தலைமையில், 2047க்குள் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் பாஜக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.