News July 5, 2024
குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட 6,000 மனுக்கள்

நாமக்கல் அருகே அமைந்துள்ள வளையப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.இதனை எதிர்த்து சிப்காட் எதிர்ப்பு குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதுவும் பலன் அளிக்காததால்,இன்று காலை வளையப்பட்டி தபால் நிலையம் முன்பு சுமார் 6,000 மனுக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போராட்டத்தில் சிப்காட் எதிர்ப்பு குழுவினர் ஈடுபட்டனர்.
Similar News
News September 8, 2025
நாமக்கல்லில் வரும் 10ஆம் தேதி இலவசம்!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 10ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திலேபியா மீன்வளர்ப்பு என்கிற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
நாமக்கல்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 8, 2025
நாமக்கல்: மாடு வாங்க மானியம் பெறுவது எப்படி?

▶️தமிழக அரசு சார்பாக கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
▶️இதற்கு மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.
▶️7 சதவீத வட்டிக்கு இந்தத் திட்டத்தில் மானியத்துடன் 5 சதவீதத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.
▶️விருப்பமுள்ளவர்க உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்(ஆவின்) மூலம் விண்ணப்பிக்கலாம்.
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!