News July 5, 2024

2 ஆண்டுகளில் 10,000 ஏசி இல்லாத பெட்டிகள் உற்பத்தி

image

அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 AC இல்லா பெட்டிகள் உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, “2024-25 & 2025-26 ஆண்டுகளில், 232 அதிக திறன் கொண்ட பார்சல் வேன், 165 பேன்ட்ரி கார்கள், 5,300 பொது பெட்டிகளுடன் 10,000 ஏசி இல்லா பெட்டிகள் தயாரிக்கப்படும். உயர்ந்த தர உணவு பயணிகளுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

தங்கம் விலை இன்று(டிச.2) சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹30 குறைந்து ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனையாகிறது. இந்திய சந்தையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவால் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹196-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,96,000-க்கும் விற்பனையாகிறது.

News December 2, 2025

FLASH: ஆட்டம் காட்டும் பங்குச்சந்தைகள்!

image

பங்குச்சந்தைகள் நேற்று போலவே இன்றும் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 332 புள்ளிகள் சரிந்து 85,308 புள்ளிகளிலும், நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 26,077 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ICICI Bank, Bajaj Finserv, Axis Bank, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 12% வரை குறைந்துள்ளது.

News December 2, 2025

2026 தேர்தலுக்கு பிரேமலதா போடும் புது ரூட்டு

image

தேமுதிக தொண்டர்களை உயர் பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பதே தனது ஆசை என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் எனக் கூறி வரும் அவர், கட்சிக்காக உழைத்த புது முகங்களை வேட்பாளர்களாக களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் என்ற பிம்பம் உடையும் எனவும் பிரேமலதா நம்புவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!