News July 4, 2024
இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை: பும்ரா

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப்போவது இல்லை என பும்ரா தெரிவித்துள்ளார். தனது கெரியர் தற்போது தான் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார். T20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி, 15 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 22, 2025
நவராத்திரி நாள்களில் விரதம் இருக்கிறீர்களா?

நவராத்திரியில் அம்பாள் அருள்பெற பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால், டாக்டரை பரிசீலிக்காமல், உண்ணாவிரதம் இருப்பது உடல்நலனுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சோர்வு, தலைச்சுற்றல், ரத்த சர்க்கரை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
News September 22, 2025
வைஷாலிக்கு தமிழக அரசு பணி

செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு, தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் பணிக்கான நியமன ஆணையை, CM ஸ்டாலின் வழங்கினார். அதேபோல், கால்பந்து வீராங்கனை சுமித்ரா, கூடைப்பந்து வீராங்கனை சத்யா, பாய்மரப்படகு வீரர் சித்ரேஷ் ஆகியோருக்கும் அரசு பதவிக்கான பணி நியமன ஆணைகளை CM வழங்கினார். இவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
உ.பி.,யில் சாதி பெயர்களை பயன்படுத்த தடை

அலகாபாத் HC-ன் உத்தரவை அடுத்து, FIR, அரஸ்ட் வாரண்ட் உள்பட போலீஸ் ஆவணங்களில் சாதிப் பெயரை பயன்படுத்த கூடாது என்று உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், போலீஸ் ஸ்டேஷன் நோட்டீஸ் பலகை, வாகனங்களிலும் சாதிய அடையாளங்களுடன் கூடிய வாசகங்களை உடனடியாக அழிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சாதி பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.