News July 4, 2024

பொதுத்துறை செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட்

image

சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காததால், தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஒய்வூதிய பாக்கியை வழங்கக்கோரி 2022இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அரசு செயல்படுத்தவில்லை என சுதந்திர போராட்ட தியாகி வேலு (97 வயது) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 22, 2025

வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

இந்தியாவில் வேலைக்கு செல்லும் வயதினரின்(15–59) எண்ணிக்கை 66%-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 பேரிலும் 66 பேர் வேலை செல்லக்கூடிய நபராக இருக்கிறார்களாம். குறிப்பாக, டெல்லியில் வேலைக்கு செல்லும் ஆண்களை(70.9%) விட பெண்களின் எண்ணிக்கை(70.9%) அதிகம். 1971-ல் 53%-ஆக இருந்த வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை, 2023-ல் 66.1%-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என சொல்கின்றனர்.

News September 22, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வட்டி விகிதத்தை RBI மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக SBI கணித்துள்ளது. புதிய GST-யால் விலை குறியீட்டு எண்(CPI) 65-75 bps குறையும். இதனால் 2004-க்கு பிறகு CPI 1.1%-க்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.29-ல் தொடங்கும் RBI-யின் பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதம் (தற்போது 5.5.%) குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனிநபர், வாகன & வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் குறையும்.

News September 22, 2025

விஜய் பின்புலத்தில் மோடி, அமித்ஷா: அப்பாவு

image

மத்திய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து, திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில்தான், அரசியல் அடிச்சுவடே தெரியாமல், சினிமாவில் பேசுவதுபோல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என்று சாடிய அவர், இனியாவது அரசியல் கட்சித் தலைவராக கண்ணியத்துடன் பேசுவது அவருக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!