News July 4, 2024

திருப்பத்தூர் – மேல்மலையனூர் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வைகாசி மாத அமாவாசைக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. இதனை முன்னிட்டு திருப்பத்தூரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பத்தூரில் இருந்து சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 14, 2025

திருப்பத்தூர்: ஊர்காவல்படையில் சேர எஸ்.பி அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சியாமளா தேவி வெளியிட்ட செய்தி குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்கள் -4 பெண்கள் -2 என 6 ஊர்காவல்படை பணிகள் காலியாக உள்ளதாகவும், அதற்கு விண்ணபிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பாச்சல் பகுதியில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News September 14, 2025

திருப்பத்தூர: இன்று இரவு ரோந்து பணி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப் 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News September 13, 2025

வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (13-09-2025) மாவட்ட மக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் ”மக்கள் தங்களின் பயணத்தின்போது ஜன்னல் வழியாக பயணிகள் கை, கால், தலையை நீட்டாதீர்கள் உங்களுடைய கவனக்குறைவால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!