News July 4, 2024

இடைத்தேர்தலுக்கு பிறகு முன்னாள் அமைச்சர்கள் கைது?

image

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீதான ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும், இதையடுத்து சிறப்பு குழு ஒன்றை அரசு அமைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகு 7 அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை வேகமெடுக்கும், அதன்பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேரும் வரிசையாக கைது செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 22, 2025

கருணாநிதி சிலையை நிறுவ அனுமதி மறுப்பு

image

நெல்லையில் வள்ளியூர் சந்தை அருகே Ex CM கருணாநிதியின் சிலையை நிறுவ அனுமதி கோரிய TN அரசின் மனுவை SC தள்ளுபடி செய்தது. முன்னதாக, மக்களுக்கு இடையூறு ஏற்படும் என கூறி சிலை வைப்பதற்கு சென்னை HC மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழக அரசு SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படும் என கருதி சென்னை HC அளித்த உத்தரவில், தலையிட விரும்பவில்லை என SC தெரிவித்துள்ளது.

News September 22, 2025

GST, IMD அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சிலை சாலையிலுள்ள GST அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் இந்த மிரட்டல் புரளி என்று தெரியவந்துள்ளது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

வந்தாச்சு ‘சென்னை ஒன்’.. இனிமே டிக்கெட் எடுப்பது ஈசி!

image

ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்தும் <<17789688>>’சென்னை ஒன்’<<>> செல்போன் APP-ஐ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் APP உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணத் திட்டமிடலுக்கு ஏற்ப QR CODE டிக்கெட்டை பெற்று அனைத்து பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.

error: Content is protected !!