News July 4, 2024

குமரியில் இதுவரை 33 பேர் குண்டர் சட்டத்தில்  கைது

image

குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி, அடிதடி, திருட்டு வழக்குகளில் கைதாகி உள்ள செல்வன் ஜெபராஜ், பிரவீன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து, இரண்டு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதன்படி, குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இந்த ஆண்டில் மொத்தம் 33 பேர் கைதாகி உள்ளனர்.  

Similar News

News April 30, 2025

மாணவியிடம் நகை பறித்த பெண்கள்; 4 பேர் கைது 

image

புதுக்கடை அருகே தும்பாலி, ஆத்திவிளை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி தையல் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மாணவியைப் பிடித்து தாக்கி அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி, சந்தோஷ், மஞ்சுளா, வளையாபதி ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 29, 2025

கன்னியாகுமரி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News April 29, 2025

95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர்

image

தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11.00 மணி அளவில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!