News July 4, 2024
தமிழ்நாட்டை மனதார நேசிக்கிறேன்: சுரேஷ் கோபி

கேரளாவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டை மனதார நேசிக்கிறேன் என்று மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கேரள மக்கள் வழங்கிய ஆசீர்வாதத்தால் நான் எம்.பி.,யாக தேர்வாகி இருந்தாலும் தமிழ்நாட்டிற்கும் சேர்த்தே பணியாற்றுவேன் எனக் கூறிய அவர், சென்னை தன்னை வளர்த்த இடம் மட்டுமல்ல, நடிக்கவும் வாழவும் வாய்ப்பளித்த அன்னைப் பூமி எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 22, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செப்.25-ல் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், செப்.26, 27-ல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
News September 22, 2025
சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள்!

முதல் உலகப்போரில், சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள் இன்று. செப்டம்பர் 22, 1914-ல் ஜெர்மனியின் ‘எம்டன்’ கப்பல், சென்னை துறைமுகத்தின் மீது 130 குண்டுகளை வீசியது. இதில், எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. ஐகோர்ட் சுற்றுச்சுவரும் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், தாக்குதல் நடத்தியது செண்பகராமன் என்ற இந்திய பொறியாளர்தான்.
News September 22, 2025
அக்.1 முதல் பரப்புரையை தொடங்கும் நயினார்..!

இபிஎஸ், விஜய் வரிசையில் தேர்தல் சுற்றுப் பயணத்தை நயினார் நாகேந்திரன் அக்.1 முதல் தொடங்கவுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 தொகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொள்வார் என்றும் 3-வது தொகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நயினார் பரப்புரை NDA-க்கு கைகொடுக்குமா?