News July 4, 2024

அண்ணாமலை முகத்திரையை கிழிப்பேன்: திருச்சி சூர்யா

image

தமிழிசை செளந்தரராஜனை விமர்சித்தது உள்ளிட்ட விவகாரங்களால் திருச்சி சூர்யா உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சூர்யா அளித்துள்ள பேட்டியில், அண்ணாமலை நாடகம் போடுவதாகவும், தனது கண் எதிரிலேயே திமுக அமைச்சர்களுடன் அண்ணாமலை பலமுறை பேசியதாகவும் சாடியுள்ளார். அண்ணாமலை நாடகம் குறித்து மக்களிடம் தெரிவித்து அவரது முகத்திரையை கிழிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News September 22, 2025

TN அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் தெலங்கானா CM

image

TN அரசு நடத்தும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலங்கான CM ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளார். நான் முதல்வன் திட்டம் உள்பட அரசின் 7 முக்கிய திட்டங்கள் தொடர்பாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.25-ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. முன்னதாக, ஆகஸ்டில் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பஞ்சாப் CM பகவந்த் மான் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 22, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செப்.25-ல் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், செப்.26, 27-ல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

News September 22, 2025

சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள்!

image

முதல் உலகப்போரில், சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள் இன்று. செப்டம்பர் 22, 1914-ல் ஜெர்மனியின் ‘எம்டன்’ கப்பல், சென்னை துறைமுகத்தின் மீது 130 குண்டுகளை வீசியது. இதில், எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. ஐகோர்ட் சுற்றுச்சுவரும் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், தாக்குதல் நடத்தியது செண்பகராமன் என்ற இந்திய பொறியாளர்தான்.

error: Content is protected !!