News July 4, 2024
தொழில் முனைவோர்களாக நரிக்குறவர் பங்கேற்ற நேர்காணல்

திருவள்ளுர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் நரிக்குறவர்கள் பயனாளிகளாக நேர்காணலில் நேற்று கலந்துகொண்டார்கள். உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News July 9, 2025
வினோதமான பழவேற்காடு கல்லறை

வினோதமான மண்டைஓடு சிலைகளோடு இந்தியாவில் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு சாட்சியாக உள்ளது பழவேற்காடு டச்சு கல்லறை. இந்தியாவில் குடியேறிய டச்சுக்காரர்களின் உடல்கள் இதில் புதைக்கப்பட்டுள்ளது. இவர்களில் டச்சு அதிகாரிகள், வணிகர்கள், வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,பிற முக்கியஸ்தர்கள் அடங்குவர். இங்கு மொத்தம் 76 கல்லறைகள் உள்ளன. இதன் அருகே இவர்கள் கட்டிய கோட்டையும் உள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 9, 2025
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 11ம் தேதி காலை 10:00 மணியளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும். கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கோட்ட அளவில் தீர்க்கப்படாத குறைகளை மனுவாக விவசாயிகள் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
திருவள்ளூரில் ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் 90 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பல ஊராட்சிகளில் நிர்வாக பிரச்னைகளால் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரே செயலர் பல ஊராட்சிகளை கவனிப்பதால் பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர். அரசு நிதி ஒதுக்கீடும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதும் முக்கிய தேவையாக உள்ளது.