News July 3, 2024

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

image

கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் இன்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் இதுவரை குற்ற செயல்களில் ஈடுபட்ட 37 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

கோவையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் (ஆகஸ்ட் 15) நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

News August 15, 2025

கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

image

கோவை: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள்<> இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

உஷார் மக்களே..கோவையில் இப்படியும் மோசடி!

image

கோவையில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி இரண்டு நபர்களிடம் ரூ.40.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால், 0422-2300600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.விழிப்புடன் இருக்க, இந்தத் தகவலைப் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!