News July 3, 2024

நீதி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு

image

121 பேரை பலிகொண்ட ஹத்ராஸ் நெரிசல் சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இக்குழுவில், அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளும் இடம்பெறுவர் என்றும் அறிவித்துள்ளார். ஹத்ராஸ் சம்பவத்தில் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பக்தர்களும் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 22, 2025

வரலாற்றில் இன்று

image

➤1931 – எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்தநாள்.
➤1941 – உக்ரைனில் 6,000 யூதர்கள் நாஜி படையால் கொல்லப்பட்டனர்.
➤1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை அடைந்தது.
➤1965 – இந்திய-பாகிஸ்தான் போர் ஐநாவால் முடிவுக்கு வந்தது.
1995 – நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

News September 22, 2025

தவறான யூடியூபர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் : வடிவேலு

image

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வடிவேலு, இன்றைய சினிமா கலைஞர்களின் நிலை குறித்து பேசியுள்ளார். திரைத்துறையினரிடம் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளதாக கூறிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் திரையுலகினர் பற்றி அவதூறாக சில பேசுவதாகவும், நாம் தவறாக பேசுபவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

News September 22, 2025

பள்ளியில் இருந்து ஒன்றாக விளையாடும் கில் – அபிஷேக்

image

நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கில்(47), அபிஷேக் சர்மா(74) ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்து ஒன்றாக விளையாடி வருகின்றனர். பள்ளியில் இருந்து கில்லுடன் ஒன்றாக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக ஆட்டநாயகன் விருதை வாங்கிய பின் அபிஷேக்கும் குறிப்பிட்டார். இருவருக்கும் யுவராஜ் ஆலோசகராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!