News July 3, 2024
பழைய குற்றாலத்தில் 8 மணி வரை குளிக்க அனுமதி

பழைய குற்றாலத்தில் இரவு 8 மணி வரை குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். விபத்தைத் தவிர்ப்பதாக, பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வனத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டதைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள் டாக்டர்.அம்பேத்கர்
தமிழ்நாடு அரசு விருது பெறுவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பட்டியலின சமுதாய மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையினை உயர்த்துவதற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News September 12, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரி விவரங்கள்

தென்காசி மாவட்டம் எஸ்.பி அவர்களின் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (12.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான தென்காசி , ஆலங்குளம் , சங்கரன்கோவில் , புளியங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
தென்காசி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. வரும் 19ஆம் தேதி சுரண்டை நகராட்சி ,புதூர் பேரூராட்சி, மந்தியூர் ஊராட்சி, புதுக்குடி ஊராட்சி , குருக்கள்பட்டி ஊராட்சி, சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெறும் எனவும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறும்படியும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.