News July 3, 2024
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மாணவர்களை வரவேற்று இனிப்புகளை வழங்கினார். இதில், அனைத்து துறையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
Similar News
News August 17, 2025
கடலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் வரும் ஆக.19-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பரங்கிப்பேட்டை, பி.முட்லூர், பிச்சாவரம், ஸ்ரீ முஷ்ணம், ஊ.மங்களம், மேலப்பாலையூர், காட்டுமன்னார்கோவில், பழஞ்சநல்லுர், சிறுவரப்பூர், வெள்ளக்கரை, ஓதியடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
கடலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஆக.16) இரவு கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
கடலூர்: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி, Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500 முதல் Rs.88,638 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் இங்கே<