News July 3, 2024

கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது சாராயமே அல்ல

image

கள்ளக்குறிச்சியில் இறந்த 65 பேர் குடித்தது சாராயமே அல்ல என்பதும் வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கமாக சாராயம் காய்ச்சி, அதில் போதையை அதிகப்படுத்த மெத்தனால் கலக்கப்படுவதுண்டு. ஆனால், கள்ளக்குறிச்சியில் மெத்தனாலை நேரடியாக தண்ணீரில் கலந்து குடித்திருக்கின்றனர். இதற்கு காரணமானவர்கள் யார் என்று தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News September 21, 2025

அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. தமிழக அரசு தகவல்

image

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக சுதந்திர தின உரையில் மோடி அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் நாளை புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை தீபாவளியையொட்டி CM ஸ்டாலின் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 21, 2025

இந்தியா பவுலிங்.. பும்ரா, வருண் உள்ளே

image

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஓமனுக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா, வருண் சக்கரவர்த்தி அணிக்கு திரும்பியுள்ளனர். ஏற்கெனவே, லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. Head to Head = 14, வெற்றி = 11 இந்தியா, 3 பாகிஸ்தான்.

News September 21, 2025

வீட்டில் எல்லோரும் ஒரே சோப்பை யூஸ் பண்றீங்களா?

image

வீடுகளில் அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்துவது பொதுவானதாக என்றாலும், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்திய பல் ஆராய்ச்சி இதழின்படி, குளிக்கப் பயன்படுத்தப்படும் சோப்புகளில் பல பாக்டீரியா & வைரஸ்கள் இருக்கிறதாம். இவை, சருமத்தில் ஏற்படும் விரிசல்கள் வழியாக உடலில் நுழைவதால், Cross Infection ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, எல்லோரும் தனித்தனி சோப் யூஸ் பண்ணுங்க!

error: Content is protected !!