News July 3, 2024
மதுரை வந்தடைந்தார் அமைச்சர் உதயநிதி

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார். அப்போது அவருடன் அவரது கணவர் பொன் வசந்த் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
Similar News
News September 6, 2025
மதுரையில் நாளை கோவில்களில் நடையடைப்பு

நாளை (செப்.,7) சந்திரகிரகணம் இரவு 9:57 மணிக்கு துவங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களில் மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு நாளை காலை 11:41 மணிக்கு நடைபெறும். மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. செப்.8 முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.
News September 6, 2025
மதுரை: சந்திர கிரகணம் நிகழ்வை பார்க்கலாம்

சந்திர கிரகணம் நாளை இரவு 9:58 மணிக்கு துவங்கி நாளை மறுநாள் அதிகாலை 1 மணி அளவில் விலகுகிறது. சந்திரன் மறைப்பு 11 மணி அளவில் துவங்கி அதிகபட்சமாக 11:41 மணிக்கு முழுமையாகி 12:22 வரை நிலைத்து நிற்கும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அதிகாலை 1:26 மணிக்கு முழுமை அடையும். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலே பார்த்து மகிழலாம் என மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
மதுரையில் வக்கீலை தாக்கிய 3 பேர் கைது

வண்டியூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பகலவன்(40). இவர் நேற்று முன்தினம் காலை நடைபெற்று சென்ற போது சங்கு நகரில் திருமண மண்டபம் எதிரில் 3 பேர் கொண்ட கும்பல் கம்பு, கற்களால் அவரை கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து அவரது மனைவியை ஷியாமளா அளித்த புகாரில் ராம்குமார் (28), அருண்பாண்டி(33), மணிமாறன்(37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.