News July 2, 2024
என்ஐஏ துணை ஆலோசகராக ரவிச்சந்திரன் நியமனம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு முகமையின் துணை ஆலோசகராக டி.வி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்மொழிவு & மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அளித்த ஒப்புதலை ஏற்று மத்திய பணியாளர் நல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஐ.பி., உளவுத்துறைத் தேசிய சிறப்பு இயக்குநராக பணியாற்றிவரும் அவர், 1990ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவார்.
Similar News
News September 21, 2025
‘நியோ மிடில் கிளாஸ்’ எழுச்சி!

25 கோடி பேர் வறுமையை வென்றதாக கூறிய PM மோடி, அவர்களை புதிய நடுத்தர வர்க்கம் என்ற அர்த்தத்தில் ‘நியோ மிடில் கிளாஸ்’ என்றார். இவர்கள் தங்களுக்கென லட்சியங்களையும் கனவுகளையும் கொண்டுள்ளனர் என்ற அவர், வருமான வரிவிலக்கு வரம்பை ₹12 லட்சமாக உயர்த்தியது, நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இதனால் வாழ்க்கை எளிதாகவும் வசதியாகவும் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
News September 21, 2025
வறுமையை வென்ற 25 கோடி மக்கள்: PM மோடி

GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என PM தெரிவித்துள்ளார். மா துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக PM குறிப்பிட்டார்.
News September 21, 2025
இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி: PM மோடி

நாளை (செப்.22), நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக PM மோடி தன் பேச்சில் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் இந்த விழாக்காலத்தில் இருந்து பயன்பெறத் தொடங்குவர் என்ற அவர், சுயசார்பு இந்தியாவை நோக்கிய மிகப்பெரிய அடியை எடுத்து வைப்பதாக கூறினார். மேலும், இந்த வரிச் சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றார்.