News July 2, 2024
37 லட்சம் பேரின் உயிரை காவு வாங்கிய இயற்கை சீற்றம்

உலகில் பேரழிவை ஏற்படுத்திய இயற்கைச் சீற்றங்களில் சீனாவின் யாங்சி நதியில் 1931ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் ஒன்றாகும். அந்த வெள்ளப் பெருக்கால், நான்ஜிங், வூகான் நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அப்பகுதியில் வாழ்ந்த 50 லட்சம் பேர் உடைமைகளை இழந்தனர். அதில் சுமார் 37 லட்சம் பேர் உயிரிழந்ததாக அரசு அமைப்புகளும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் மதிப்பிட்டுள்ளன.
Similar News
News September 21, 2025
BREAKING: அக்.20-ல் அனைத்து பள்ளிகளுக்கும்.. உத்தரவு

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களின் விவரங்களை அக்.20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை கெடு விதித்துள்ளது. ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News September 21, 2025
GST குறைக்கவில்லையா? தமிழிலே புகாரளிக்கலாம்

2 வரம்புகளாக (5%, 18%) மாற்றப்பட்ட GST சீர்திருத்தங்கள், நாளை (செப்.22) முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், உரிய GST வரியை குறைக்காத நிறுவனங்கள் மீது புகாரளிக்க 1915 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ் உள்பட 17 மொழிகளில் புகார்களை அளிக்கலாம். <
News September 21, 2025
இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும், காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.