News July 2, 2024
பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க தோப்புகள்,பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

காஞ்சிபுரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் <
News September 8, 2025
காஞ்சிபுரம் வரும் துணை முதல்வர்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 9) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். காந்தி சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.
News September 8, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க