News July 2, 2024

107 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

image

உத்தர பிரதேசத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமானோர் பலியான நிகழ்வை அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மக்களவையில் இரங்கல் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 21, 2025

GST குறைக்கவில்லையா? தமிழிலே புகாரளிக்கலாம்

image

2 வரம்புகளாக (5%, 18%) மாற்றப்பட்ட GST சீர்திருத்தங்கள், நாளை (செப்.22) முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், உரிய GST வரியை குறைக்காத நிறுவனங்கள் மீது புகாரளிக்க 1915 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ் உள்பட 17 மொழிகளில் புகார்களை அளிக்கலாம். <>INGRAM<<>> என்ற ஒருங்கிணைந்த போர்ட்டல் வழியாக லாக் இன் செய்தும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.

News September 21, 2025

இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும், காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

News September 21, 2025

ஆயுதபூஜை விடுமுறை.. நாளை முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

image

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே நாளை(செப்.22), 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE IT.

error: Content is protected !!