News July 2, 2024

பரபரப்பை ஏற்படுத்திய சுவரெழுத்து பிரசாரம்

image

நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மாணவர் அணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் நீட் தேர்வை சுவரெழுத்து பிரசாரத்தை மர்ம நபர்கள் சிலர் முன்னெடுத்துள்ளனர். அதில், “நீட்டை விலக்கு, இல்லையென்றால் தமிழகம் இந்தியாவை புறக்கணிக்கும்” என எழுதியுள்ளனர்.

Similar News

News September 21, 2025

BREAKING: அக்.20-ல் அனைத்து பள்ளிகளுக்கும்.. உத்தரவு

image

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களின் விவரங்களை அக்.20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை கெடு விதித்துள்ளது. ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 21, 2025

GST குறைக்கவில்லையா? தமிழிலே புகாரளிக்கலாம்

image

2 வரம்புகளாக (5%, 18%) மாற்றப்பட்ட GST சீர்திருத்தங்கள், நாளை (செப்.22) முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், உரிய GST வரியை குறைக்காத நிறுவனங்கள் மீது புகாரளிக்க 1915 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ் உள்பட 17 மொழிகளில் புகார்களை அளிக்கலாம். <>INGRAM<<>> என்ற ஒருங்கிணைந்த போர்ட்டல் வழியாக லாக் இன் செய்தும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.

News September 21, 2025

இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும், காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!