News July 2, 2024
அரக்கோணம் ஐடிஐயில் நேரடியாக சேர வாய்ப்பு

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இயங்கி வரும் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஜூலை 15ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூடுதல் விவரங்களுக்கு 94990 55679 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<
News November 9, 2025
ராணிப்பேட்டை: பொதுமக்களுக்கு GOOD NEWS!

ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில், கடந்த சில மாதங்களாக அந்த இடத்தில் கால அட்டவணை பலகை இல்லாமல் இருந்தது. இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (நவ.7) பஸ் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகையை அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
News November 9, 2025
ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்.!

ராணிப்பேட்டை, ரெட்டிவலம் அருகே நேற்று முன்தினம் (நவ. 7) அரக்கோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து, கண்டக்டர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.


