News July 2, 2024
தலைமை ஆசிரியர்களுக்கு நாளை வரை அவகாசம்

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம் நாளையுடன் (ஜூலை 3) முடிவடைகிறது. 2024-25 கல்வியாண்டில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 21இல் திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் விவரங்களை, ஜூன் 21-26 வரை பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
Similar News
News November 18, 2025
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் மீன்

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் பாம்பன் அந்தோனியார் புரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்று அழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் பிடிபட்டது. இந்த மீன் இன்று (நவ.18) 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
News November 18, 2025
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் மீன்

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் பாம்பன் அந்தோனியார் புரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்று அழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் பிடிபட்டது. இந்த மீன் இன்று (நவ.18) 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
News November 18, 2025
பி.ஆர்.கவாய் தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர்: விசிக எம்.பி

SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர் என்று ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். SC பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனுக்கு அனுமதி, கிரீமி லேயர் அளவுகோல் SC பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறி இரண்டு பெரிய தீமைகளை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார். அச்சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய நபராகவே கவாய் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.


