News July 1, 2024
எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு

நில அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், போலி ஆவணங்களை கொடுத்து நில அபகரிப்பு செய்ததாக நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது பயம் காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவான நிலையில், அவரை தனிப்படைகள் தேடிவருகின்றன.
Similar News
News November 18, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தது HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை(₹2,000) நாளை(நவ.19) பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். கோவையில் நடைபெறும் விழாவில் நாளை பங்கேற்கும் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். KYC அப்டேட் செய்யாததால், கடந்த தவணையை பெறத் தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையை( ₹4,000) சேர்த்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தது HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை(₹2,000) நாளை(நவ.19) பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். கோவையில் நடைபெறும் விழாவில் நாளை பங்கேற்கும் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். KYC அப்டேட் செய்யாததால், கடந்த தவணையை பெறத் தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையை( ₹4,000) சேர்த்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
இந்திய மண்ணில் ஜடேஜா புதிய சாதனை

இந்திய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா மூன்றாமிடம் பிடித்துள்ளார். 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் மொத்தமாக 627 விக்கெட்கள் எடுத்துள்ள நிலையில், அதில் இந்தியாவில் மட்டும் 381 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், கும்பிளே (476), அஷ்வின் (475) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா உள்ளார். ஹர்பஜன் (380), கபில் தேவ் (319) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


