News July 1, 2024

விஷச்சாராயம் தொடர்பாக ஐகோர்ட் விசாரணை

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. MM.சுப்ரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரித்தது. அப்போது, தலைமை செயலர், டிஜிபி, சேலம் & கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கல்வராயன் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுக்கு வலியுறுத்தினர்.

Similar News

News September 20, 2025

அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்: GK வாசன்

image

தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக அணி வெற்றி அணியாக உருவெடுத்து இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எத்தனை அணிகள் வேண்டுமானாலும் களத்தில் நிற்கலாம். ஆனால் மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பது அதிமுக கூட்டணி மட்டுமே என அவர் கூறியுள்ளார். வரும் காலங்களில் அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரக்கூடிய பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக ஜி.கே.வாசன் பேசினார்.

News September 20, 2025

லீவுக்கு முந்தைய நாள் இரவுக்கு இப்படி ஒரு பவரா?

image

‘ஹைய்யா.. நாளைக்கு லீவு’ என்பது, பள்ளிக் காலம் தொட்டே நம்முடன் கலந்துள்ள உணர்வு. என்னதான் விடுமுறை நாள் நமக்கு இன்பத்தை கொடுத்தாலும், அதற்கு முந்தைய நாளின் மாலைப்பொழுது கொடுக்கும் நிம்மதியை எந்த நாளும் கொடுத்திட முடியாது. ‘நாளை ஒருநாள் லீவ் இருக்கிறது’ என்ற நினைப்புடனே, முந்தைய நாளை ரசித்து அனுபவித்து வருபவர்கள் பலர். நீங்கள் லீவுக்கு முந்தைய நாளை எப்படி கழிப்பீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க

News September 20, 2025

TRB ராஜாவை மறைமுகமாக சாடிய விஜய்

image

திருவாரூர் பரப்புரையில் அமைச்சர் TRB ராஜாவை விஜய் மறைமுகமாக சாடினார். இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரோட வேலை என்ன தெரியுமா? CM குடும்பத்திற்கு சேவை செய்யுறது மட்டும் தான் அவருடைய வேலை. அந்த அமைச்சருக்கு மக்கள் தான் முக்கியம்னு புரிய வைக்க வேண்டும் என விஜய் கூறினார். மேலும், திருவாரூரில் பஸ் ஸ்டாண்டை NH உடன் இணைக்க சரியான ரோடு வசதி கிடையாது என்று குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!