News June 30, 2024
உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்: அண்ணாமலை

டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, `கிக் இல்லை’ என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான். அதனால் தான், சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நாடுகின்றனர் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது. உதாரணமாக ’ஸ்வச் பாரத்தில்’ 44வது இடத்தில் இருந்த சென்னை, தற்போது 200வது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என குற்றஞ்சாட்டினார்.
Similar News
News September 20, 2025
இந்தியாவில் பலவீனமான PM உள்ளார்: ராகுல் காந்தி

நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான PM உள்ளார் என்று ராகுல் காந்தி X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். USA-வின் H-1B விசாவை பெறுவதற்கான கட்டணம் ₹90 லட்சம் என்று கடுமையாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார். அதேபோல், நாட்டை பாதுகாப்பதில் தான் வெளியுறவு கொள்கை இருக்க வேண்டும் என்று கார்கேயும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News September 20, 2025
வில்வித்தை விளம்பர தூதரான ராம் சரண்

உலகிலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி (Archery Premier league) இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த லீக்கின் விளம்பர தூதராக ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் மேடை வரை ஏறியதால் ராம் சரண் சர்வதேச ரசிகர்களையும் கொண்டுள்ளார். தன்னை விளம்பர தூதராக நியமித்ததற்கு மகிழ்ச்சி அடைவதாக கூறி ராம் சரண் நெகிழ்ந்துள்ளார்.
News September 20, 2025
தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலை முன்வைக்கும் விஜய்

ஈழத் தமிழர்களுக்காக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறார் விஜய். 2008-ல் முள்ளிவாய்க்கால் படுகொலையை எதிர்த்து 1 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார். 2024-ல் முள்ளிவாய்க்கால நினைவு தினத்தன்று ’மாவீரம் போற்றுதும்’ என பதிவிட்டு அதிர்வலையை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது நாகை பிரசாரத்தில் ஈழத்தமிழர்களின் உயிரும் முக்கியம் என கூறி தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலை முன்வைத்துவருகிறார்.