News June 30, 2024
ஒரே வாரத்தில் ₹2.89 லட்சம் கோடி மதிப்பு உயர்வு

கடந்த சில நாள்களாக இந்திய பங்குச்சந்தை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் டாப் 9 நிறுவனங்களின் பங்கு மதிப்பு ₹2.89 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏர்டெல், எஸ்பிஐ வங்கி, இன்போசிஸ், இந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி ஆகியவை அடங்கும். அதிகபட்சமாக ரிலையன்ஸ் மதிப்பு ₹1.52 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
Similar News
News September 20, 2025
ரேஷன் பொருள் வாங்கும்போது இத Try பண்ணுங்க..

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.
News September 20, 2025
துயரம்: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணம்..

இந்தாண்டு தமிழ் சினிமாவுக்கு மிக துயரமான ஆண்டாக மாறியுள்ளது. சமீபத்தில் நடிகைகள் சரோஜா தேவி, பிந்து கோஷ், நடிகர்கள் மனோஜ், ராஜேஷ், நாகேந்திரன், கராத்தே ஹூசைனி, யுவராஜ் நேத்ரன், இயக்குநர் S.S. ஸ்டான்லி, மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் போன்றோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளார். இதில், பெரும்பாலும் உடல்நலக்குறைவால்தான் மரணித்து இருக்கின்றனர்.
News September 20, 2025
கூடுதல் தொகுதிகள் கேட்கும் திமுக கூட்டணி கட்சிகள்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. இதனால், 2021-ல் 25 இடங்களில் போட்டியிட்ட காங்., இந்தமுறை கூடுதலாக 10 இடங்கள் கேட்க முடிவெடுத்துள்ளதாம். அதேபோல், விசிக, 2 பொதுத்தொகுதி உட்பட 10, இரு கம்யூ., கட்சிகளும் தலா 10 இடங்களிலும் போட்டியிட முடிவு எடுத்துள்ளதாம். இதனால், திமுக போட்டியிடும் இடங்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.