News June 30, 2024
மம்தாவை எச்சரித்த மே.வங்க ஆளுநர்

மம்தா பானர்ஜி என்னை மிரட்ட முடியாது என மே.வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் கூறியுள்ளார். மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை மதிப்பதாக தெரிவித்துள்ள அவர், அதற்காக எனது சுய மரியாதையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மே.வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஆளுநர் மாளிகை செல்லவே பெண்கள் அச்சப்படுவதாக மம்தா கூறியிருந்தார்.
Similar News
News September 20, 2025
வங்கி வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS

சேவை கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. பல கோடி மக்கள் வாழும் நாட்டில், வங்கிகளின் அதிக சேவை கட்டணத்தால், குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, டெபிட் கார்டு, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு, தாமத பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கான சேவை கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தியது. ஆனால், அதற்கான வரம்பை RBI நிர்ணயிக்கவில்லை.
News September 20, 2025
BREAKING: விஜய் கூட்டத்திற்குள் புகுந்தது ஆம்புலன்ஸ்

நாகையில் தவெக தலைவர் விஜய் சற்றுநேரத்தில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தபோது, கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்துள்ளது. உடனே அக்கட்சியின் தொண்டர்கள், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டனர். இதேபோல் ஏற்கனெவே, விஜய் தனது முதல் பரப்புரையை திருச்சியில் மேற்கொண்டபோதும், கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
News September 20, 2025
அமைப்பின் பெயரை மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது திட்டமா?

பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தனது பாகிஸ்தான் பிரிவு பெயரை ’அல் முராபிதூன்’ என மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற பெயர் தடை செய்யப்பட்டுள்ளதால் நிதி திரட்டுவது கடினமாக இருக்கிறதாம். இதனால், பெயரை மாற்றி e-wallet, UPI போன்ற டிஜிட்டல் வழிகளில் நிதி திரட்டி, 4 பில்லியன் பாக்., ரூபாய் சேகரித்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.