News June 30, 2024
விழுப்புரம்: காதர் மொய்தீன் வரவேற்பு

விழுப்புரத்தில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த காதர் மொய்தீன், திமுக வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பாடுபடும் எனக் கூறினார்.
Similar News
News July 8, 2025
அன்புமணிக்கு எதிராக பாமக செயற்குழு தீர்மானம்

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம். “பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது; நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது” என்று செயற்குழுவில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
News July 8, 2025
விழுப்புரம்: தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை போராட்டம்

மத்திய பாஜக அரசின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, வரும் ஜூலை 9, 2025 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காலை 10 மணிக்கு விழுப்புரம் தலைமை தபால் நிலையம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெறும். இப்போராட்ட அழைப்பிதழை போக்குவரத்து தொ.மு.ச சார்பில் மு.அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டது.
News July 8, 2025
ஆளுநரை வரவேற்ற ஆட்சியர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (08.07.2025) விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மையத்திற்கு வருகைபுரிந்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், ஆளுநரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், உடனிருந்தார்.