News June 30, 2024
செவி சாய்க்காத மத்திய அரசு: சு.வெங்கடேசன்

நீட் புகார்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என எம்.பி சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்தால் அயோத்தி ராமரையே பாஜகவினர் கை கழுவி விடுவார்கள் என்றும், ராமர் கோயில் உள்ள தொகுதியில் வென்ற காங். எம்.பி மோடிக்கு எதிரே அமர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களவையில் முன்பு ஜெய்ஸ்ரீராம் கோஷம் காதைப் பிளக்கும் என்றும் தற்போது சப்தநாடிகளும் அடங்கிப்போயுள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News November 18, 2025
குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.
News November 18, 2025
குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.
News November 18, 2025
ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக NIA நடத்தி வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல், டெல்லியில் டிரோன் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்துள்ளன. NIA தற்கொலைப்படை தாக்குதலுக்கு உதவிய ஜாசிர் பிலால் வானியை கைது செய்துள்ளதால், விரைவில் மேலும் சிலர் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


