News June 30, 2024

சிறப்பு கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு

image

தி.மலை மாவட்டத்தில் 860 பஞ்சாயத்துகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் பசுமை வீடுகள் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். பயனாளிகள் புதுவீடு பெறுவதற்கு தேவையான ஆவணங்களை கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

image

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, தி.மலை மாவட்ட அதிகாரிகள் (7373004548) அல்லது உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16974217>>தொடர்ச்சி<<>>

News July 7, 2025

ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் (2/2)

image

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும்<> இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தி.மலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் கொடுக்க வேண்டும். உடனே காப்பீடு அட்டை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

தி.மலையில் மின்வேலியால் தொழிலாளி பலி!

image

வந்தவாசியை அடுத்த அதியனூரை சேர்ந்த விவசாயி சாமிக்கண்ணு (48). இவரது விவசாய நிலத்தில் உள்ள நெற்பயிரை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் சட்டவிரோதமாக வயலில் மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த குப்பன் (43) என்பவர் நேற்று காலை அந்த நிலத்தின் வழியாக சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!