News June 29, 2024
ஜவுளி பூங்கா அமைக்க மானியம் – ஆட்சியர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதற்கு 50 சதவீதம் அரசு மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மண்டல துணை இயக்குநர் துணிநூல் துறை, 1A-2/1, சங்ககிரி மெயின்ரோடு, சேலம் 636006 என்ற முகவரியிலோ, 0427-2913006 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ, ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
கொளத்தூர்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

சேலம், கொளத்தூர் அருகே சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ (16) என்ற மாணவி, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பாட்டியின் கண்டிப்பால் மனமுடைந்தவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
வாழப்பாடி: 17 வயது சிறுமி காணாமல் போனதால் பரபரப்பு!

வாழப்பாடி: கொட்டவாடியை சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தும் உறிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் நேற்று கொட்டவாடியில் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் பேச்சு நடத்தி, சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உறுதி அளித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்


