News June 29, 2024
கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்- ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் சார்பில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில், வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர், “விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகை கடன் வழங்கும்போது கனிவுடன் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கு துவங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: பொதுமக்களுக்கு GOOD NEWS!

ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில், கடந்த சில மாதங்களாக அந்த இடத்தில் கால அட்டவணை பலகை இல்லாமல் இருந்தது. இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (நவ.7) பஸ் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகையை அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
News November 9, 2025
ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்.!

ராணிப்பேட்டை, ரெட்டிவலம் அருகே நேற்று முன்தினம் (நவ. 7) அரக்கோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து, கண்டக்டர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
News November 9, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


