News June 29, 2024
கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களைவிசாரிக்க சிபிஐ மனு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான 21 நபர்களில் மீண்டும் 11 பேரை ஐந்து நாட்கள் விசாரணை செய்ய அனுமதிக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவானது ஜூலை 1ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும் இவ்வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் மற்றும் முக்கிய நபர்களை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லம் திட்டம் 1/2

மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04151-228802) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17016105>>தொடர்ச்சி<<>>
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2/2

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி பெண்குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் வைப்பு நிதியாக ரூ.50,000 பெறலாம். இதில் பயன் பெற ஆண் குழந்தைகள் இருக்க கூடாது. தகுதியுடையோர் அருகில் உள்ள இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.