News June 29, 2024
செங்கை: 30ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டில் வரும் 30ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்திடும் பொருட்டு 356 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 5, 2025
செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <
News August 5, 2025
செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றாலோ (அ) உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் இந்த தளத்திலே புகார் அளிக்கலாம். முதலில் உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும். உங்கள் தொலைபேசி எண் & இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!