News June 29, 2024
நாளை 12 மையங்களில் எழுத்துத் தேர்வு

புதுச்சேரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஊர்க்காவல் படை ஆண், பெண் வீரர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு, நாளை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த 3,034 ஆண்களும் 1,195 பெண்களும் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவுள்ளனர் என்று கூறியுள்ளார்.
Similar News
News August 7, 2025
புதுவையில் இஸ்லாமியர் கட்டிய முருகன் கோயில்!

புதுவையில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முகமது கௌஸ் என்பவருக்கு முருகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதே வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. 1970ஆம் ஆண்டு அன்றைய கவர்னருடன் சேர்ந்து கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார். பல இடையூறுகள் வந்தாலும் 1977ஆம் ஆண்டு கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி முடித்தார். இக்கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் கௌசிக பாலசுப்பிரமணியர் கோயில் என பெயர் வைத்தார். ஷேர் செய்யுங்க!
News August 7, 2025
புதுவையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமான ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பத்தினர் இங்கு <
News August 7, 2025
+1 மாணவர்கள் சேர்க்கை இறுதி கலந்தாய்வு துவக்கம்

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி நேற்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்காமல் பலர் உள்ளனர். இன்று, நாளை மற்றும் 11ம் தேதிகளில் குருசுக்குப்பம் அரசு பள்ளிகயில் கலந்தாய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.