News June 28, 2024

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்

image

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( இரவு ஒரு மணி வரை) 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இரவில் வீட்டிற்கு செல்வோர், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 19, 2025

கோவையை கண்ட்ரோலில் எடுக்க திமுக போடும் ஸ்கெட்ச்

image

கோவையில் அதிமுக-பாஜகவுக்கான மவுசு கூடியிருப்பதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அறிவாலயத்தை அலறச் செய்திருக்கிறதாம். இதனால் கோவை கிங் என கருதப்படும் செந்தில் பாலாஜியை வரும் தேர்தலில் கோவையில் களமிறக்கவும், கடந்த சட்டமன்றத்தேர்தலில் கரூரை கண்ட்ரோலில் வைத்திருந்த SB-யின் சகோதரர் அசோக்கை அங்கு நிறுத்தவும் தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

News September 19, 2025

12வது தேர்ச்சி போதும்.. ₹35,000 சம்பளத்தில் வேலை!

image

IGI Aviation Services-ல் காலியாக உள்ள 1,017 Ground Staff பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 30 வயதுக்குட்பட்ட 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து & நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹25,000- ₹35,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News September 19, 2025

ரோபோ சங்கர் உடலுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி

image

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் SA சந்திரசேகர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், MS பாஸ்கர், செந்தில், புகழ், நடிகைகள் நளினி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

error: Content is protected !!