News June 28, 2024

ஆணவ கொலை-இளைஞர் உடல் ஒப்படைப்பு

image

அருப்புக்கோட்டையை சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் நேற்று முன்தினம் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர்கள் அனைவரையும் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து இன்று 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 6 பேர் மீது வழக்கு பதிந்து வன்கொடுமை தடுப்பு வழக்காக போலீசார் மாற்றம் செய்ததையடுத்து உடலை பெற்றனர்

Similar News

News September 6, 2025

மதுரை மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை..!

image

மதுரை மாநகர காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அல்லது மேலதிகாரி போல நடித்து ஊழியர்களிடம் அவசரத் தேவைக்காக பரிசு அட்டைகள் வாங்கச் சொல்லவோ பணம் பரிமாறச் சொல்லவோ செய்கின்றனர். அந்நிய எண்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், சந்தேகமான மின்னஞ்சல், செய்திகளை கவனமாக கையாளவும், சந்தேகம் இருந்தால் காவல்துறையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 6, 2025

மதுரையில் மேம்பால பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

image

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 2100 மீட்டர் நீளத்தில் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 6, 2025

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்

image

மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 232 நவீன அரங்குகளுடன் பத்து நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவை நேற்று அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

error: Content is protected !!