News June 28, 2024
மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்த நிலையில், போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
ரோபோ சங்கரின் கனவை தடுத்த காலன்!

‘என் பேரனுக்கு நீங்கதான் பெயர் வைக்கணும்’ என்ற அளவுக்கு கமலின் மிக தீவிர ரசிகனான ரோபோ சங்கரின் கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. ‘ஆளவந்தான்’ படம் பார்க்க கமல் போன்றே மொட்டையடித்துக் கொண்டு சென்ற சங்கருக்கு, கமலுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ‘இந்தியன் 2’-ல் வாய்ப்பு வந்தும் அது நிறைவேறாமல் போக, அவரின் கனவுக்கு காலன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
News September 19, 2025
ADMK-லிருந்து பலர் DMK-வுக்கு வரவுள்ளனர்: மருது அழகுராஜ்

அபகரிப்பு அரசியலை விட்டு, அரவணைப்பு அரசியலை நோக்கி நகர்ந்துள்ளதாக திமுகவில் இணைந்த <<17753920>>மருது அழகுராஜ்<<>> கூறியுள்ளார். 20 ஆண்டு காலம் அதிமுகவில் பயணித்து குறிப்பாக ஜெயலலிதாவின் உரை ஆசிரியராக இருந்த தனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இபிஎஸ் அதிமுகவை அபகரித்தார், அவரை பாஜக அபகரித்துவிட்டது என கூறிய அவர், மேலும் பலர் அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணைய உள்ளனர் என்றார்.
News September 19, 2025
BREAKING: விஜய் வீட்டில் அதிகாலையில் பரபரப்பு

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்த இளைஞரால் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையங்களை தாண்டி வீட்டின் மொட்டை மாடிக்கு அந்த இளைஞர் சென்றது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு உள்துறை அமைச்சகம் அவருக்கு ‘Y’ பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.