News June 28, 2024
கள்ளக்குறிச்சி விவகாரம் – யாரையும் தண்டிக்க முடியாது – கி.வீரமணி

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தி.க.தலைவர் கி.வீரமணி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு அணுகுகிறது. மத்திய அரசும் வித்தை காட்ட மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஆனால், அவர்களால் சட்டப்படி யாரையும் தண்டிக்க முடியாது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று தெரியாமல் ஊடக வெளிச்சத்திற்காக நியமனம் செய்கிறார்கள் என்றார்.
Similar News
News July 11, 2025
பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து பயனடையலாம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் வீடுவீடாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. 10% பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து கொள்வர்.தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க.உங்களால் ஒருவர் கண்டிப்பாக பயனடைவார்.
News July 11, 2025
இன்று முதல் 2 சூப்பர் பாஸ்ட் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-போடிநாயக்கனூர், மைசூர்-தூத்துக்குடி ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகம் அதிகரித்தல் காரணமாக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.10 மணிக்கு மதுரை வரவேண்டிய போடி எக்ஸ்பிரஸ் 6.40 மணிக்கே வந்துவிடும். அதேபோல் 7.35 மணிக்கு வர வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் 7.25 மணிக்கு வந்தடைந்து விடும். எனவே பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்படி தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.
News July 10, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.