News June 28, 2024
இபிஎஸ் சொல்வது உண்மை தான்: அன்புமணி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியை அசிங்கப்படுத்துவது என்று இ.பி.எஸ் சொல்வது உண்மை தான் என பாமக தலைவர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், சபாநாயகர் யாரையும் பேசவிடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சியினர் பேசும் விஷயங்கள் வெளியே வருவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 28, 2025
விழுப்புரம்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

விழுப்புரம் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க.
News October 28, 2025
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

விழுப்புரம்: வானூர் அருகே புதுக்குப்பம் ஏரிக்கரை ஆபத்தான நிலையில் உள்ளதால் சீரமைக்க வேண்டும் எனக் கோரி, விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா நடத்தினர். போலீசார் தடுத்ததால் அலுவலகம் முன் அமர்ந்து கோஷமிட்டனர். ஏரிக்கு 64 ஏரிகளின் உபரிநீர் வரும் நிலையில், கரை பணமின்றி உடையும் அபாயம் உள்ளதாக மனுவில் தெரிவித்தனர். டி.ஆர்.ஓ. அரிதாஸ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே கலைந்தனர்.
News October 28, 2025
விழுப்புரத்தில் கிராம சபைக் கூட்டம்!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆகையால், பொதுமக்கள் இதில் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.


