News June 28, 2024

வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் ஆகிய 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் chennai.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 1,000 முதல் 18,000 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Similar News

News March 9, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை மீண்டும் தள்ளிவைப்பு!

image

பரங்கிமலை – வேளச்சேரி இடையிலான ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்டவாளத்தில் சில சிறிய அளவிலான சிவில் & எலக்ட்ரிக்கல் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என ஆய்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாளை தொடங்க வேண்டிய சேவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தள்ளிப்போயிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!