News June 28, 2024

4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக விரிவாக்கம்

image

திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் 4 நகராட்சிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேலும் சிறப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்.. இதுவே முதல்முறை

image

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் ஜெ.வீரமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணியின் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. மேலும், ராஜீவ்காந்தி கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News March 13, 2026

பங்குச் சந்தையில் ₹23.44 லட்சம் கோடி சரிவு

image

மேற்காசிய போர் தொடங்கியதிலிருந்து BSE Sensex 5,252 புள்ளிகள் (6.46%) சரிந்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி முதல் BSE-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு, ₹23.4 லட்சம் கோடி சரிந்து ₹4.40 லட்சம் கோடி ஆனது. முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக பங்குகளை விற்று வெளியேறியதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

News March 13, 2026

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வணிகர் சங்கம்

image

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்த நிலையிலும், பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகும் நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் மீண்டும் விளக்கமளித்துள்ளது.

error: Content is protected !!