News June 28, 2024
பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தொடர் மழை காரணமாக பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதன்படி, கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ ₹1,500க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ₹300க்கும், ₹1000க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ₹400க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கிலோ ₹200க்கு விற்கப்பட்ட அரளி ₹70க்கும், ₹90க்கு விற்ற வாடாமல்லி ₹50க்கும், ₹125க்கு விற்பனையான சிகப்பு கேந்தி ₹85க்கும் விற்கப்படுகிறது.
Similar News
News November 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹240 உயர்வு

தங்கம் விலை இன்று(நவ.8) சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹165-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. <<18232021>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை உயர்ந்ததன் எதிரொலியாக நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது.
News November 8, 2025
எதெல்லாம் டிரெண்டா மாறுது பாருங்க மக்களே!

நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி SM-ல் பதிவிடுவது தற்போது ட்ரெண்டாக மாறியுள்ளது. காரணமே இல்லாமல் மன்னிப்பு கேட்குறாங்களே என குழம்ப வேண்டாம். எங்கள் நிறுவனம் இவ்வளவு அருமையாக இருக்கிறது, அதனால்தான் உங்களால் தவிர்க்கமுடியவில்லை என்ற டோனில் மன்னிப்பு கடிதங்களை கம்பெனிகள் வெளியிடுகின்றன. கடிதங்களை பார்க்க போட்டோக்களை SWIPE IT. நீங்கள் யாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதுவீங்க?
News November 8, 2025
இந்த தாவரங்களுக்கு விதை தேவையில்லை

சில தாவரங்கள் வளர விதைகள் தேவையில்லை. வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் மூலம் வளர்கின்றன. இதுபோன்று விதைகள் இல்லாமல் வளரும் சில தாவரங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தாவரங்களுக்கு பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.


