News June 28, 2024
சிவகங்கை: மாதம் ரூ.1000/- பெற விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயின்று, மேற்படிப்பு பயில செல்லும் மாணவிகளுக்கு, இடைநிறுத்தமின்றி படிப்பு முடிக்கும்வரை மாதம் ரூ.1000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், +2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு பயிலும்போது மாதம் ரூ.1000/- பெற மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
சிவகங்கையில் பல இடங்களில் மின்தடை

சிவகங்கையில் நாளை பராமரிப்புப் பணிகள் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், தெ. புதுக்கோட்டை, கீழப்பசலை, சங்கமங்கலம், குறிச்சி, முனைவென்றி, கச்சாத்தநல்லூா், நல்லாண்டிபுரம் சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, அ.காளாப்பூர், பிரான்மலை, இவைகளின் சுற்று வட்டார கிராமங்களிலும் மின்தடை ஏற்படும்.
News October 14, 2025
காரைக்குடி: ஓய்வூதியத்தில் இருந்து பயிற்சி மையம்

காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த பி. பரமசிவம், பணி ஓய்வு பெற்ற மாற்றுத் திறனாளியான இவர், கிராமப்புற இளைஞர்களுக்காக தனது சொந்த ஊரான பள்ளத்தூரில் வாடகைக் கட்டிடத்தில் திறன் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதற்காக தான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்திலிருந்து ரூ.30 லட்சம் செலவழித்துள்ளார். அங்கு பணிபுரியும் 5 பயிற்சியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் இருந்து ஊதியம் வழங்குகிறார்.
News October 13, 2025
காரைக்குடியில் விமானப் பயிற்சி மையம்

தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி மற்றும் முதலீட்டில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உயர முயற்சித்து வருகிறது. இதற்காக பாதுகாப்புத் தொழில் வழித்தடத் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் காரைக்குடி & கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம் (Flight Training Centre) அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார்.