News June 27, 2024
திருவாரூர்; பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.
Similar News
News March 8, 2026
திருவாரூர்: விசிகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியை சார்ந்த சுமார் 20 பேர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி விசிக மாவட்ட செயலாளர் கு.சக்திவேல் தலைமையில் தங்களை நேற்று விசிகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து, கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில், கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 8, 2026
திருவாரூர்: மது போதையில் தவறி விழுந்து ஒருவர் பலி

கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் நேற்று இரவு கோட்டூர் அரசு மதுபானக் கடையில் மதுவை வாங்கிக் கொண்டு அடப்பாற்றில் இருந்து பிரியும் வாய்க்கால் மதகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இந்நிலையில், மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் கோட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News March 8, 2026
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்லைன் கடன் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “ஏதேனும் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன் அதன் மதிப்புரை அதிகாரப்பூர்வ உரிமங்களை சரிபார்க்கவும் கடன் வழங்குவதற்கு முன் பணம் கேட்கும் செயல்களை தவிற்குமாறும், அது தொடர்பாக வழங்கப்படும் சலுகைகளை ஏற்க வேண்டாம்.” என எச்சரிக்கப்பட்டுள்ளது.


