News June 27, 2024
திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
குமரி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04652-227339) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 26, 2025
குமரி: பைக்குகள் அடுத்தடுத்து மோதியதில் இளைஞர் பலி!

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜாண் பிரகாஷ் (22). செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் கிறிஸ்துமஸ் குடில்களை பார்க்க தனது நண்பருடன் டூவீலரில் சென்றார். பருத்திவிளை அருகே சென்றபோது பின்னால் (ம) எதிரே வந்த பைக்குகள் அடுத்தடுத்து மோதியதில் 5 பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ஜாண் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் விசாரணை.
News December 26, 2025
குமரி மக்களே இதான் கடைசி… கலெக்டர் முக்கிய அறிவிப்பு.!

குமரி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <


