News June 27, 2024

நிருப்புகலூர் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்

image

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த திருப்புகலூரில் வாஸ்து தலமான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இன்று சாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூரில் நடந்த படப்பிடிப்புக்காக வந்த சசிகுமார், அக்னீஸ்வரரை தரிசிக்க வந்தது தெரியவந்தது. கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சசிகுமாரை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர் .

Similar News

News August 22, 2025

நாகை: சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மெசேஜ் போதும்!

image

கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவானது வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 29-ந்தேதி அன்று ஒருநாள் மட்டும் நாகை மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஈடுசெய்ய செப்டம்பர் 13-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

ரவுடிகள் மீது கடும் நடவடிக்க எடுக்க போலீஸ் சூப்ரண்ட் உத்தரவு

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
இதில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பின்னர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளசாராயம் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் ரவுடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எஸ்.பி.செல்வகுமார் உத்தரவிட்டார்

error: Content is protected !!